SPONSER

Tuesday, 3 January 2017

கிராம பகுதிகளுக்கு 40 சதவீத பணம் அனுப்ப உத்தரவு




புதுடில்லி: கிராமப்புற பகுதிகளுக்கு 40 சதவீத பணத்தையும், அதிகளவில் ரூ.500 நோட்டுகளையும் அனுப்பி வைக்க வேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி இணையத்தில் வெளியிட்ட செய்தி: கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப பணம் அனுப்பி வைக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. அப்பகுதி மக்களுக்கு தேவையான அளவு பணம் கிடைக்க 40 சதவீத பணம் அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனக்கூறிள்ளது. இது தொடர்பாக 7 விதிகளை பின்பற்ற வேண்டும் என வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
உத்தரவு:


1. கிராமப்புற வங்கி கிளைகளுக்கு புதிய ரூபாய் நோட்டுகளை அனுப்பி வைக்க வேண்டும்
2. தேவைக்கேற்ப அணுகுமுறை அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறிப்பிட்ட சதவீதம் பணம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்
3. அனைத்து வங்கி கருவூல மையங்களும் குறிப்பிட்ட விகிதத்தை பின்பற்ற வேண்டும்
4. அனைத்து வங்கி கருவூல மையங்களும் ரூ.500 மற்றும் அதற்கு கீழ் மதிப்பிலான பணத்தை வழங்க வேண்டும்
5. தேவைக்கேற்ப ரூ.100 நோட்டுகள் வழங்கப்பட வேண்டும்.
6. தேவைக்கேற்ப நாணயங்களை வாங்கி பொது மக்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 உத்தரவுகளை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...