SPONSER

Tuesday, 27 December 2016

5 நாட்களுக்கு பிறகு வாய் திறந்த அ.தி.மு.க.,

சென்னை: தமிழக தலைமை செயலாளராக இருந்த ராம மோகன் ராவ் வீடு மற்றும் தலைமை செயலக அறையில் வருமான வரித்துறை சோதனை நடந்த ஐந்து நாட்களுக்கு பிறகு அ.தி.மு.க., சார்பில், இன்று மாலை                                                    கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.ராம மோகன் ராவ், அவரது மகன் விவேக், அவரது கூட்டாளிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில், டிச., 21ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ராம மோகன்ராவின் சென்னை வீடு மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறையில் சோதனை நடந்த போது துணை ராணுவம் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இதன் பிறகு, அ.தி.மு.க., சார்பிலோ, தமிழக அரசு சார்பிலோ சோதனை குறித்து எந்த கருத்தும் தெரிவி்க்கப்படவில்லை. சோதனையின்போது தலைமை செயலகத்தில் தனது அறையில் இருந்த முதல்வர் பன்னீர்செல்வமும் இதுகுறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...