SPONSER

Monday, 26 December 2016

ஏழைகளுக்கு எதிரான மோடி அரசு : ராகுல்

பரன்: கடந்த 2 ஆண்டில் பா.ஜ., அரசு ஏழை மக்களுக்கு ஆதரவாக எதுவும் செய்யவில்லை என காங்., துணை தலைவர் ராகுல் கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பரன் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் மேலும் பேசுகையில்; 
                                                    

பெண்கள் வைத்திருந்த பணம்:
மோடி அரசு கறுப்பு பணத்தை ஒழிப்பதாக பழைய ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்துள்ளார். இதன் மூலம் கறுப்பு பணம். ஊழல் அதிகரித்துள்ளது. இது பொருளாதார வளர்ச்சிக்கு எதிரானது. மோடி அரசின் புது பண கொள்கை ஏழைகள், பெண்களுக்கு எதிரானது. அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 
மோடி அரசு ஏழைகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மோடி அரசு ஏழை மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. வீட்டில் பெண்கள் வைத்திருந்த பணமும் கறுப்பு பணமா? ஏழைகள் சிரமத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளனர். மோடி சுவிஸ் நாட்டில் இருந்து கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வருவேன் என்றார். கொண்டு வந்தாரா , அவர் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும். சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பெயர் பட்டியலை நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும். 


ஏழை மக்களுக்கு நன்மை

ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் போடப்படும் என்றாரே, யாராவது பெற்றுள்ளீர்களா? ஏழை மக்களின் பணத்தை மோடி கொள்ளை அடித்து விட்டார். இந்தப்பணம் பணக்காரர்களுக்கு சென்று விட்டது. ஏழைகள் , விவசாயிகள், பெண்கள் கடுமையாக மோடி அரசில் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் தற்கொலை பெருகி விட்டது. மோடி நாட்டையும், சட்டங்களையும் துண்டாடுகிறார். காங்கிரஸ் கட்சியே ஏழை மக்களுக்கு நன்மை செய்கிறது. இவ்வாறு அவர் பேசினார். 

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...