தரகா;பிலிப்பைன்சை நோக்கி நகரும், 'நாக்டென்' புயலால், அந்நாட்டு மக்கள் பீதியடைந்துள்ளனர். கிறிஸ்துமஸ் நாளான நேற்று, தாழ்வான பகுதிகளில் வசிக்கும், ஆயிரக்கணக்கானோர், பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தப்பட்டதால், கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களையிழந்தது. தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்சை நோக்கி, நாக்டென் அதிவேகப் புயல் நகர்ந்து வருவது, மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
'இந்த புயல், கரையை கடக்கும் போது, மணிக்கு, 250 - 300 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்' என, அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயலை அடுத்து, மிக கனத்த மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், மீட்புப் படையினர் உதவியால், வேறு இடங்களில் தஞ்சம் புகுந்துஉள்ளனர்.
கிறிஸ்துமஸ் நாளான நேற்று, புயல் பீதியால், தங்கள் இருப்பிடங்களை விட்டு, முகாம்களில் தஞ்சம் அடைந்தோர், பண்டிகையை கொண்டாட முடியாமல் சோகத்தில் ஆழ்ந்தனர். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக, பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்துள்ளது. கடலில் பெரிய அளவிலான அலைகள் எழும் என்பதால், கடற்கரையை ஒட்டியுள்ள நகரங்களில் வசிக்கும் அனைவரும், பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
'இந்த புயல், கரையை கடக்கும் போது, மணிக்கு, 250 - 300 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்' என, அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயலை அடுத்து, மிக கனத்த மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், மீட்புப் படையினர் உதவியால், வேறு இடங்களில் தஞ்சம் புகுந்துஉள்ளனர்.
கிறிஸ்துமஸ் நாளான நேற்று, புயல் பீதியால், தங்கள் இருப்பிடங்களை விட்டு, முகாம்களில் தஞ்சம் அடைந்தோர், பண்டிகையை கொண்டாட முடியாமல் சோகத்தில் ஆழ்ந்தனர். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக, பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்துள்ளது. கடலில் பெரிய அளவிலான அலைகள் எழும் என்பதால், கடற்கரையை ஒட்டியுள்ள நகரங்களில் வசிக்கும் அனைவரும், பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
No comments:
Write commentsTHANKS FOR VISIT MY WEBSIT
உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...