SPONSER

Thursday 15 December 2016

ஜெ., மரணம் குறித்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு

ஜெ., மரணம் குறித்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு:


    புதுடில்லி: மறைந்த தமிழக முதல்வர், ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 
தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி அமைப்பு சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மனு விபரம்:மறைந்த தமிழக முதல்வர் மற்றும் அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா மரணமடைந்த சூழ்நிலை, சந்தேகத்தை ஏற்படும் வகையில் உள்ளது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட விதம், அனைத்து பிரிவினர் மத்தியிலும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, ஜெயலலிதாவின் உறவினர்களும், எதிர்க்கட்சிகளும் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர்; எனவே, ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்; ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கைகளை, நிபுணர்கள் ஆராய்ந்து அறிக்கை அளிக்க வேண்டும்.மருத்துவ அறிக்கைகளை வெளியிடும்படி, மத்திய அரசு, தமிழக அரசு, அப்பல்லோ மருத்துவமனைக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இம்மனு மீதும், ஜெலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கிலும், சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பிக்கும் வரை, ஜெயலலிதாவின் சொத்துகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...