SPONSER

Thursday 15 December 2016

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடகா மீண்டும் மனுதாக்கல்

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடகா மீண்டும் மனுதாக்கல்"
                                   
புதுடில்லி : அணைகளில் தண்ணீர் இல்லாததால், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு சார்பில் புதிய இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகா தொடர்ந்து அடம் :


தமிழகத்திற்கு டிசம்பர் 15ம் தேதி வரை தினமும் 2,000 கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டது. இந்த கால கெடு நாளை முடிவடைய உள்ள நிலையில், இன்று புதிய இடைக்கால மனு ஒன்றை கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், குடிநீர் தேவையை விட குறைவான அளவே கர்நாடக அணைகளில் நீர்இருப்பு உள்ளது. இதனை கவனத்தில் கொண்டு காவிரியில் தமிழகத்திற்கு மேலும் தண்ணீர் திறக்க உத்தரவிடக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

x

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...