திருப்பூர் : ஆதார் விவரம் பதிவு செய்யாத ரேஷன் கார்டுகள், ரத்து செய்யப்படுமென்றும், பதிவு செய்ய நாளையே கடைசி வாய்ப்பு என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில், குடும்பத்தில் யாருமே ஆதார் பதிவு செய்யாத, 66 ஆயிரத்து, 917 கார்டுகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. நாளைக்குள், ஆதார் விவரங்களை பதிவு செய்யாவிட்டால், போலி ரேஷன் கார்டாக கருதி, நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்று, மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, ஒன்பது தாலுகாக்களில், 1,135 ரேஷன் கடைகள் உள்ளன; அவற்றில், 7.37 லட்சத்துக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. மாவட்டத்தில் மொத்தம், 24 லட்சத்துக்கும் அதிகமானவர், பொது வினியோக திட்டம் மூலம் பயனடைந்து வருகின்றனர். பொதுவினியோக திட்டத்தை கம்ப் யூட்டர் மயமாக்கும் வகை யில், விற்பனை கருவி (பாயின்ட் ஆப்சேல்) ரேஷன் கடைகளுக்கு வழங்கப்பட்டு, கார்டு விவரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கார்டில் உள்ள ஒவ்வொரு நபரின் ஆதார் விவரமும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில இதுவரை, 86 சதவீதம் பேர், "மொபைல்' எண்களை பதிவு செய்துள்ளனர்; 81 சதவீதம் பேர் ஆதார் விவரங்களை பதிவு செய்துள்ளனர். அனைத்து உறுப்பினர்களும் ஆதார் பதிவு செய்த குடும்பங்கள்; ஒரு சிலர் மட்டும் ஆதார் பதிவு செய்த குடும்பங்கள்; ஒருவர் கூட ஆதார் பதியாத குடும்பங்கள் என, மூன்று வகையான பட்டியல் தயாரித்து, அதன் அடிப்படையில் கள ஆய்வு நடந்து வரு கிறது. தகுதியற்ற நபரின் பெயரை நீக்கவும், தகுதியானவர்களின் ஆதார் பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
கடந்த மூன்று மாதங்களாக பொருட்கள் எதுவும் பெறாமல், ஒருவர் கூட ஆதார் பதிவு செய்யாத குடும்பங்களின் கார்டுகள், தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில், மாவட்டத்தில் மொத்தம், 66 ஆயிரத்து, 917 கார்டுகள் ரத்தாகியுள்ளன.
அதிகபட்சமாக, திருப்பூர் வடக்கு தாலுகாவில், 19 ஆயிரத்து, 232 கார்டுகள், திருப்பூர் தெற்கில், 9,825; தாராபுரத்தில், 9,184; பல்லடத்தில், 7,196; அவிநாசியில், 7,143; உடுமலையில், 5,850; காங்கயத்தில், 4,723; மடத்துக்குளம், 2,210; ஊத்துக்குளியில், 1,554 கார்டுகள் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த கார்டுகளை புதுப்பித்துக்கொள்ள, விடுபட்டவர்கள், நாளைக்குள் ஆதார் விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண் டும் என்று, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நீக்கப்பட்ட ரேஷன் கார்டுகளின் விவரம், அந்தந்த ரேஷன் கடைகளில், மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
விடுபட்ட குடும்பத்தினர், உறுப்பினர்கள், ஆதார் கார்டு அல்லது ஆதார் பதிவு செய்தமைக்கான ரசீதுகளுடன் சென்று, நாளைக்குள் ரேஷன் கார்டை புதுப்பித்துக் கொண்டு, பொருட்கள் நிறுத்த பட்டியலில் இருந்து, கார்டை நீக்கம் செய்து கொள்ள வேண்டும். கார்டுகளை புதுப்பிக்க முன்வராதபட்சத்தில், அவை போலி கார்டுகளாக கருதி, நிரந்தரமாக நீக்க வாய்ப்புள்ளது.
மாவட்ட அளவில், குடும்பத்தில் யாருமே ஆதார் பதிவு செய்யாத, 66 ஆயிரத்து, 917 கார்டுகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. நாளைக்குள், ஆதார் விவரங்களை பதிவு செய்யாவிட்டால், போலி ரேஷன் கார்டாக கருதி, நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்று, மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, ஒன்பது தாலுகாக்களில், 1,135 ரேஷன் கடைகள் உள்ளன; அவற்றில், 7.37 லட்சத்துக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. மாவட்டத்தில் மொத்தம், 24 லட்சத்துக்கும் அதிகமானவர், பொது வினியோக திட்டம் மூலம் பயனடைந்து வருகின்றனர். பொதுவினியோக திட்டத்தை கம்ப் யூட்டர் மயமாக்கும் வகை யில், விற்பனை கருவி (பாயின்ட் ஆப்சேல்) ரேஷன் கடைகளுக்கு வழங்கப்பட்டு, கார்டு விவரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கார்டில் உள்ள ஒவ்வொரு நபரின் ஆதார் விவரமும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில இதுவரை, 86 சதவீதம் பேர், "மொபைல்' எண்களை பதிவு செய்துள்ளனர்; 81 சதவீதம் பேர் ஆதார் விவரங்களை பதிவு செய்துள்ளனர். அனைத்து உறுப்பினர்களும் ஆதார் பதிவு செய்த குடும்பங்கள்; ஒரு சிலர் மட்டும் ஆதார் பதிவு செய்த குடும்பங்கள்; ஒருவர் கூட ஆதார் பதியாத குடும்பங்கள் என, மூன்று வகையான பட்டியல் தயாரித்து, அதன் அடிப்படையில் கள ஆய்வு நடந்து வரு கிறது. தகுதியற்ற நபரின் பெயரை நீக்கவும், தகுதியானவர்களின் ஆதார் பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
கடந்த மூன்று மாதங்களாக பொருட்கள் எதுவும் பெறாமல், ஒருவர் கூட ஆதார் பதிவு செய்யாத குடும்பங்களின் கார்டுகள், தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில், மாவட்டத்தில் மொத்தம், 66 ஆயிரத்து, 917 கார்டுகள் ரத்தாகியுள்ளன.
அதிகபட்சமாக, திருப்பூர் வடக்கு தாலுகாவில், 19 ஆயிரத்து, 232 கார்டுகள், திருப்பூர் தெற்கில், 9,825; தாராபுரத்தில், 9,184; பல்லடத்தில், 7,196; அவிநாசியில், 7,143; உடுமலையில், 5,850; காங்கயத்தில், 4,723; மடத்துக்குளம், 2,210; ஊத்துக்குளியில், 1,554 கார்டுகள் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த கார்டுகளை புதுப்பித்துக்கொள்ள, விடுபட்டவர்கள், நாளைக்குள் ஆதார் விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண் டும் என்று, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நீக்கப்பட்ட ரேஷன் கார்டுகளின் விவரம், அந்தந்த ரேஷன் கடைகளில், மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
விடுபட்ட குடும்பத்தினர், உறுப்பினர்கள், ஆதார் கார்டு அல்லது ஆதார் பதிவு செய்தமைக்கான ரசீதுகளுடன் சென்று, நாளைக்குள் ரேஷன் கார்டை புதுப்பித்துக் கொண்டு, பொருட்கள் நிறுத்த பட்டியலில் இருந்து, கார்டை நீக்கம் செய்து கொள்ள வேண்டும். கார்டுகளை புதுப்பிக்க முன்வராதபட்சத்தில், அவை போலி கார்டுகளாக கருதி, நிரந்தரமாக நீக்க வாய்ப்புள்ளது.
No comments:
Write commentsTHANKS FOR VISIT MY WEBSIT
உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...