SPONSER

Wednesday, 11 January 2017

ஜல்லிக்கட்டை ஒட்டுமொத்தமாக தடை செய்வது தவறு. பிரபல பாடகி

தமிழகம் முழுவதும் தற்போது பற்றி எரிந்து கொண்டிருக்கும் பிரச்சனை ஜல்லிக்கட்டு. தமிழ் அமைப்புகள், அரசியல்வாதிகள், திரையுலகினர், மாணவர்கள் என ஒட்டுமொத்த தமிழகமே இந்த வருடம் ஜல்லிக்கட்டை நடத்தியே தீர வேண்டும் என்று தீவிரமாக உள்ளது.
 
                  

                    இந்நிலையில் பிரபல பாடகி சின்மயி ஜல்லிக்கட்டு குறித்த தனது கருத்தை கூறியுள்ளார். ஜல்லிக்கட்டு நடத்த பீட்டா அமைப்பு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் ஜல்லிக்கட்டுப் போட்டி தமிழக கலாசாரத்துடன் இணைந்தது என்றும், ஜல்லிக்கட்டு நடத்தும்போது விதிகளை கடுமையாக்கலாமே தவிர ஒட்டுமொத்தமாக ஜல்லிக்கட்டை தடை செய்வது தவறு என்றும் அவர் கூறியுள்ளார்.
 
மேலும் பீட்டா அமைப்பை ஒழிக்க வேண்டும் என்று தான் கூறவில்லை என்றும் அவ்வாறு தான் கூறியதாக ஒருசில பத்திரிகைகள் பொறுப்பின்றி செய்தி வெளியிட்டுள்ளதாகவும், சின்மயி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...