SPONSER

Tuesday, 3 January 2017

வெளிச்சத்துக்கு வராத மோடி குடும்பம்

வெளிச்சத்துக்கு வராத மோடி குடும்பம்



ஆமதாபாத்,:அரசியல் வாழ்க்கையில் ஒருவர் வெற்றி பெற்று, உயர் பதவியை எட்டும்போது, உறவினர்களும், நண்பர்களும், ஏன் வீட்டு வேலை செய்தவர்களும் கூட, அதை சாதகமாக்கும் சூழ்நிலையில், பிரதமர் மோடியின் குடும்பம், தங்கள் நிழல் கூட, அரசு இயந்திரத்தில் படாதபடி, தங்கள் வாழ்க்கையை நடத்தி வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலம், மேசானா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரான வாத்நகர் தான், பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த ஊர். இங்கு, இப்போதும், அவரது குடும்பத்தார், உறவினர்கள் வசித்து வருகின்றனர்.

18 சகோதர, சகோதரிகள்



வாத் நகரில் டீக்கடை நடத்தி வந்த தாமோதர் தாஸ் மூல்சந்த் மோடி - ஹீராபென் தம்பதியின், ஆறு குழந்தைகளில், மூன்றாவதாக பிறந்தவர் நரேந்திர மோடி, 66. இவருடன் பிறந்தவர்கள், சோம்பாய், 75, அம்ருத்பாய், 72,
பிரகலாத்பாய், 64, வசந்திபென், 61, பங்கஜ்பாய், 58.இதைத் தவிர, வாத் நகர் மற்றும் குஜராத்தில், மோடியின், சித்தப்பாக்கள் வழியிலான, 18 சகோதர, சகோதரிகளும் வசித்து வருகின்றனர். அவர்களது குழந்தைகள், பேரன், பேத்திகள் என, 50க்கும் மேற்பட்ட நெருங்கிய
உறவினர்கள் உள்ளனர்.
அரசியல் வாடையே இல்லாத குடும்பத்தில் பிறந்த நரேந்திர மோடி, மக்கள் பணிக்காக தன்

குடும்பத்தை பிரிந்து, தனியாக வசித்து வந்தார். குஜராத் முதல்வராக இருந்தபோதும், பிரதமராக பதவியேற்ற பின்னும்கூட, இதுவரை, அரசு நிர்வாகத்திலோ, கட்சியிலோ அவரது குடும்பத்தாரின் தலையீடு எதுவுமே இருந்ததில்லை.
இது குறித்து, அரசியல் விமர்சகர்கள் கூறியதாவது:இவ்வளவு மிகப் பெரிய பொறுப்பில் உள்ளவர், தன் குடும்பத்துக்காக எதையும் செய்யவில்லை; அவர்களும், எதையுமே
மோடியிடம் கேட்டதில்லை. இந்த காலத்தில், இது போன்ற குடும்பம் அமைவது மிகவும் ஆச்சரியமானது தான்.
அனுமதி மறுப்பு




இதற்காக பிரதமர் மோடி பாராட்டுக்குரியவர்; அதைவிட, எதையுமே எதிர்பார்க்காமல், அவருக்கு எந்த கெட்ட பெயரும் ஏற்படக் கூடாது என்பதில், அவரது குடும்பத்தினர் உறுதியாக உள்ளது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.குஜராத் முதல்வராக இருந்தபோது, 2003ல், தன் குடும்பத்தார் அனைவரையும் சந்தித்தார் மோடி. அதன்பின், தன் சகோதரர்களை கூட அவர் சந்திக்கவில்லை. கடந்த ஆறு மாதங்களில், தன் தாயாரை இரண்டு முறை பார்க்கச் சென்றார்.
அப்போது கூட, அவரது உறவினர்கள் அங்கு வந்து, அவரை சந்திக்க, மோடி அனுமதிக்க மறுத்துவிட்டார்.
பாராட்டு




'ஊழல், மோசடிக்கு அப்பாற்பட்டவனாக இருக்க விரும்புகிறேன். குடும்பத்தினர் கூட இருந்தால், இந்த பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு அளிப்பதாக அமைந்துவிடும்' என,
ஒருமுறை மோடிகுறிப்பிட்டார்.அதேபோல், 'என்னிடம் எதையும் கேட்காமல், தொடர்ந்து தங்கள் இயல்பான வாழ்க்கையை நடத்தி வரும் என் சகோதர, சகோதரிகள், உறவினர்கள் தான் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர்கள்' என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
முந்தைய பிரதமர்கள் எப்படி?



இதற்கு முன் பிரதமராக இருந்தவர்கள், பிரதமருக்கான அரசு இல்லத்தில், தங்கள் குடும்பத்தாருடன் வசித்து வந்தனர். ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, இந்திரா உடனிருந்தார். இந்திரா பிரதமராக இருந்தபோது, அவரது மகன்கள் ராஜிவ், சஞ்சய், மருமகள்கள் சோனியா, மேனகா, பேரன், பேத்திகள் என, அனைவரும் உடனிருந்தனர்.
லால் பகதுார் சாஸ்திரியுடன், அவரது குடும்பத்தினர் இருந்தனர். பிரம்மச்சாரியான வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, அவரது வளர்ப்பு மகள், மருமகன் உடனிருந்தனர்.
தனியாக இருந்தாலும், மோடிக்கு குடும்ப பாசம் உள்ளது என்பதை அவரது உறவினர்களும், அவருடன் பழகியவர்களும் கூறுகின்றனர். சமீபத்தில், செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம் குறித்த விமர்சனம் எழுந்தபோது, ஒரு நிகழ்ச்சியில் பேசிய மோடி, 'நான் உயர் பதவியில் அமரக்கூடிய குடும்பத்தில் பிறக்கவில்லை; இந்த நாட்டுக்காக என் குடும்பத்தை பிரிந்து வந்துள்ளேன்' என, உருக்கமாக பேசினார்.
ஆனால், குடும்பம் தன்னை கட்டி போட்டுவிடக் கூடாது; அவர்களால் எந்த நிர்ப்பந்தமும் ஏற்படக் கூடாது என்பதில் மோடி உறுதியாக உள்ளார். அதேபோல், மோடிக்கு எந்த நெருக்கடியும் கொடுக்கக் கூடாது என்பதில், அவரது குடும்பத்தினரும் உறுதியாக உள்ளனர்.

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...