SPONSER

Tuesday, 3 January 2017

ஜல்லிக்கட்டு வாக்குறுதி என்ன ஆச்சு?: கேட்கிறார் ஸ்டாலின்

ஜல்லிக்கட்டு வாக்குறுதி என்ன ஆச்சு?: கேட்கிறார் ஸ்டாலின்





ஜல்லிக்கட்டு வாக்குறுதி என்ன ஆச்சு?: கேட்கிறார் ஸ்டாலின்

அலங்காநல்லூர்: ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என பா.ஜ., அமைச்சர்கள், நிர்வாகிகள் அளித்த வாக்குறுதிகள் என்ன ஆனது என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.


என்ன ஆச்சு?


மதுரை, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது:

ஜல்லிக்கட்டு, தமிழர்களின் பண்பாட்டு அடையாளம். கலாசாரத்தை பாதுகாக்கவே தி.மு.க., சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் . ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என பா.ஜ., அமைச்சர்கள் தலைவர்கள் அளித்த வாக்குறுதிகள் என்ன ஆனது?நிறைவேற்றப்படும் என்றால் மட்டுமே வாக்குறுதி தர வேண்டும்.
தி.மு.க., ஆட்சியில் இருந்திருந்தால், ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுத்திருப்போம். ஜல்லிக்கட்டு தடை போனதற்கு காரணம் அ.தி.மு.க., தான் என்றார். 

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...