SPONSER

Sunday 25 December 2016

5ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி

புதுடில்லி: இனிமேல் அனைத்து பள்ளிகளிலும் 5ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி முறை இருக்கும் என மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.
                                    
தற்போது 8 ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை இருந்துள்ளது. இந்த முறையை மாற்றி 5ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சியாக்குவதற்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. பெயில் பயமில்லாததால், மாணவர்கள் மத்தியில் ஒழுக்கமின்மை அதிகரித்து வருவதால் மத்திய மனித வள அமைச்சக முடிவுக்கு, ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் 16வது பிரிவில் திருத்தம் செய்யவும் ஒப்புதல் வழங்கியுள்ளது. 
இந்த சட்டத்தில் திருத்தம் செய்ய எந்த மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கட்டாய தேர்ச்சி முறையால் கல்வி தரம் குறைந்து வருவதாக மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...