SPONSER

Thursday 15 December 2016

ஜெ., மருமகள் தீபாவுக்கு ஆதரவாக பேனர்

ஜெ., மருமகள் தீபாவுக்கு ஆதரவாக பேனர்:



செஞ்சி: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், தீபாவுக்கு ஆதரவாக வைக்கப்பட்ட பேனரை, அ.தி.மு.க.,வினர் அகற்றினர். மறைந்த முதல்வர் ஜெ.,வின் அண்ணன் மகள் தீபா, அ.தி.மு.க.,வை வழி நடத்த வலியுறுத்தி, மாஜி., கவுன்சிலர் தணிகாசலம் உள்ளிட்ட சிலர் பெயரில், விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில், டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இந்த பேனர், அ.தி.மு.க.,வினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. நேற்று மதியம் 12:00 மணி அளவில், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணைத் தலைவர் ரங்கநாதன் தலைமையில் வந்த அ.தி.மு.க.,வினர், டிஜிட்டல் பேனரை பிரித்து எடுத்து சென்றனர். பேனர் வைத்த நான்கு பேர் மீதும், அனுமதியின்றி பேனர் வைத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...