SPONSER

Thursday, 29 December 2016

கனிமொழிக்கு காத்திருக்கு புது பதவி: பொதுக்குழுவில் அறிவிக்க திட்டம்

தி.மு.க.,வின் துணைப் பொதுச் செயலராக கனிமொழியை கொண்டுவர அவரது தரப்பினர் வலியுறுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.


பொதுக்குழு கூட்டம்

பரபரப்பான அரசியல் சூழலில், அ.தி.மு.க., பொதுக்குழுவைத் தொடர்ந்து, வரும் ஜனவரி 4ல், சென்னை, அறிவாலயத்தில்,, தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. அந்தப் பொதுக் குழுவிலும், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கு பட்டம் சூட்டும் நிகழ்ச்சி நடக்கும் என தெரிகிறது.

கட்சித் தலைவர் கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் சூழலில், கட்சியை முழுமையாக வழி நடத்தி செல்வதற்கு, செயல் தலைவர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு, அதில் ஸ்டாலினை நியமிக்க, கட்சியின் மூத்த முன்னோடிகளும்; முக்கிய நிர்வாகிகளும் தயாராகி விட்டனர். இதற்காக, கட்சியின் பொதுக் குழு உறுப்பினர்கள் பெரும்பாலானோரிடம், ஸ்டாலின் குடும்பத்தினரும்; ஆதரவு தலைவர்களும் பேசி விட்டனர்.

இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:

ஸ்டாலின் விஷயத்தில் அன்பழகன் கருத்து வேறு மாதிரியாக இருக்கிறது. கட்சிக்கு தலைவராக கருணாநிதியும்; பொதுச் செயலராக நானும் இருப்போம். இது எங்கள் கடைசி காலம் வரை தொடரும். இதில் எந்த மாற்றமும் இல்லை. கட்சிக்கு உழைப்பதில் ஸ்டாலினின் முயற்சி அலாதியானது அதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. கட்சியின் தலைவராக வேண்டுமானால், சில காலம் பொறுத்திருக்கத்தான் வேண்டும். கட்சிக்கு எல்லாரும் பாடுபட்டதை விட, தலைவராக இருக்கும் கருணாநிதி, நிறையவே பாடுபட்டுள்ளார். எம்.ஜி.ஆர்., கட்சியில் இருந்து விலக்கப்பட்டப் பின், அவரை எதிர்த்து போராடி கட்சியை காப்பாற்றியதில், கருணாநிதியின் உழைப்பும்; பங்கும் அலாதியானது.

தேவையானால், கட்சியில் செயல் தலைவர் என்ற அதிகாரம் மிக்கதொரு பொறுப்பை ஏற்படுத்திக் கொண்டு, அதில், ஸ்டாலின் தன்னை இறுத்திக் கொள்ளலாம் எனவும் அன்பழகன் கூறியுள்ளார்.


செயல் தலைவர்

இதையடுத்தே, கட்சியில் செயல் தலைவர் பதவியை உருவாக்கி, அதில் தன்னை உட்கார வைத்துக் கொள்ள ஸ்டாலின் திட்டம் போட்டார். அதற்காகவே, கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள், தயார்படுத்தப்பட்டுள்ளனர்.

ஸ்டாலின் கட்சியின் செயல் தலைவர் ஆவதைத் தொடர்ந்து, அவரது தங்கையும் மாநில மகளிர் அணி செயலருமான கனிமொழி எம்.பி.,க்கும் கட்சியில் பதவியை பிடிக்கும் ஆவல் அதிகரித்துள்ளது. அதன் விளைவாக, கட்சியின் துணை பொதுச் செயலர் பதவியில் இருந்து, மறைந்த முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியன் வகித்த அந்த பொறுப்பில், கனிமொழியை நியமிக்கவும், கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் முடிவெடுத்துள்ளனர்.
இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...