SPONSER

Tuesday, 10 January 2017

தீபாவிற்கு பெருகும் ஆதரவு; சசிகலா உறவினர்கள் திக்... திக்...

தீபாவிற்கு பெருகும் ஆதரவு; சசிகலா உறவினர்கள் திக்... திக்...

.




தஞ்சாவூர், : - சசிகலாவின் சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டங்களில், தீபாவிற்கு பெருகி வரும் ஆதரவால், சசிகலா உறவினர்களை பீதியடைய செய்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வில் உயர்மட்ட நிர்வாகிகள், பகீரத பிரயத்தனம் செய்து, சசிகலாவை பொதுச் செயலராக அமரச் செய்துவிட்டனர். சசிகலாவை ஏற்காத, அதிருப்தியாளர்கள், சசிகலாவிற்கு ஆதரவாக வைக்கப்படும், 'பிளக்ஸ்' பேனர்கள் மீது, சாணம் வீசி தங்களின் எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வந்தனர்.

மேலும், இதற்கு மாற்றாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு, ஆதரவுகள் தமிழகம் முழுவதும் தற்போது வலுவாக எழுந்துள்ளது.
ஆதரவுகள் பெருக துவங்கி விட்டன


தீபாவிற்கு ஆதரவாக, பேரவைகளை துவக்கியுள்ள, அ.தி.மு.க., அதிருப்தியாளர்கள். தீபாவை தமிழக முதல்வராக்க சபதம் எடுத்து செயல்பட துவங்கியுள்ளனர்.
இந்நிலையில், சசிகலா அவரது கணவன் நடராஜன் மற்றும் சசிகலாவின் ஒட்டுமொத்த உறவினர்களும் உள்ள சொந்த மண்ணான தஞ்சாவூர் மாவட்டங்களில், தீபாவிற்குஆதரவுகள் பெருக துவங்கி விட்டன.தீபா பேரவைக்கான பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டு விட்ட நிலையில், தீபா பேரவை சார்பாக, போஸ்டர், பிளக்ஸ் வைப்பது, கூட்டங்களை கூட்டி, புதிய நிர்வாகிகள் சேர்ப்பு என, துவங்கி விட்டனர்.

சசிகலா உறவினர்கள், சாதிகளின் அடிப்படையில் கட்சியின் மேல் மட்ட நிர்வாகிகளை வளைத்து, அவர்களை மிரட்டியும் தாங்களின் செல்வாக்கை தஞ்சாவூரின் சுற்றுவட்டாரங்களில் பெருக்கி வருகின்றனர். இதற்கு மாற்றாக, சசிகலாவின் சொல்வாக்கை குறைக்கும் வகையில், தீபா பேரவை வலு பெற்று வருவதால், மன்னார்குடியினர் மத்தியில், பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

சசிகலாவை விமர்சிக்காதீங்க



'அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலா, மக்கள் அங்கீகாரம் பெறாதவர். எனவே, அவரை விமர்சிக்காதீர்கள்' என, தன்னை சந்தித்த ஆதரவாளர்களிடம், ஜெ., மருமகள் தீபா கூறியுள்ளார்.
இது குறித்து, தீபாவை சந்தித்த, அவரது ஆதரவாளர்கள் கூறியதாவது:
எம்.ஜி.ஆர்., - ஜெ., - கருணாநிதி போன்ற தலைவர்கள், மக்களை சந்தித்து, அவர்களின் அங்கீகாரம் பெற்றவர்கள். சசிகலா, இன்னும் மக்கள் அங்கீகாரம் பெறவில்லை. எனவே, அவரை விமர்சிக்க வேண்டிய தேவையில்லை என, எங்களிடம், தீபா தெரிவித்தார்.

அவரது உத்தரவை ஏற்று, சசிகலாவை புறக்கணித்து விட்டு, அ.தி.மு.க.,வின் ஒட்டுமொத்த ஆதரவும், தீபாவுக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.

அ.தி.மு.க.,வை உருவாக்கிய, எம்.ஜி.ஆர்., மற்றும் தொண்டர்களை வழிநடத்திய ஜெயலலிதாவின் புகழை முன்னெடுத்து செல்ல வேண்டும் என, எங்களிடம், தீபா தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர். 


No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...